-->
Breaking News
Loading...

knowledge is Power

கேரளாவில் ஒரு பெரிய தொழிற்சாலை கட்டப்பட்டு, அந்த ஆலை கட்டும் போது பெரும் பிரச்சனை ஏற்பட்டது.  

பிரச்சனை என்னவென்றால் ஆலையில் கட்டப்பட்ட ஆழமானக் குழியின் அடிப்பகுதியில் மிகவும் கனமான இயந்திரம் வைக்கப்பட வேண்டும், ஆனால் இயந்திரத்தின் எடை ஒரு சவாலாக இருந்தது.

இயந்திரம் தளத்திற்கு வந்துவிட்டது, ஆனால் 30 அடி ஆழமான குழியில் அதை எவ்வாறு இறக்குவது என்பது 
பெரும் சிக்கலாக மாறிவிட்டது.

சரியாக நிறுவப்பட வில்லை என்றால், அடித்தளம் மற்றும் இயந்திரம் இரண்டும் மிகவும் பாதிக்கப்படும்.

இப்போது, ​​மிக அதிக எடையைத் தூக்கக் கூடிய கிரேன்கள் எல்லா இடங்களிலும் கிடைக்காத காலம் இது. கிடைக்கக் கூடியவர்கள் இயந்திரத்தைத் தூக்கலாம், ஆனால் அதை ஆழமானக் குழியில் தரையிறக்குவது அவர்களின் திறனுக்கு அப்பாற்பட்டது.

இறுதியாக, ஆலைக் கட்டும் நிறுவனம் கை விட்டு, இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண டெண்டர் விடப்பட்டது.  

இதனால், ஏராளமானோர், இந்த இயந்திரத்தை குழிக்குள் பொருத்தி, 
தங்கள் சலுகைகளை அனுப்பினர்.  

கிரேன் வரவழைத்து இயந்திரத்தை பொருத்தி விடலாம் என நினைத்தனர்.

அதன்படி, பணியை முடிக்க, 10 முதல், 15 லட்சம் ரூபாய் வரைக் கேட்டனர். ஆனால் அந்த மக்களிடையே ஒரு ஜென்டில்மேன் இருந்தார்...

மெஷின் தண்ணீரில் நனைந்தால், ஏதாவது பிரச்சனை வருமா?" என்று நிறுவனத்திடம் கேட்டார்.

இது இயந்திரத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது” என்று நிறுவனம் பதிலளித்தது.

அதன் பின்,டெண்டரையும் நிரப்பினார்.அனைத்து சலுகைகளையும் பார்த்தப் போது, ​​அந்த நபர் வேலையை முடிக்க 5 லட்சம் ரூபாய் மட்டுமே கேட்டுள்ளார்.  

எனவே வெளிப்படையாக, இயந்திரம் அமைக்கும் வேலை அவருக்கு வழங்கப்பட்டது.

ஆனால் விசித்திரமான விஷயம் என்னவென்றால், இந்த நபர் இந்த வேலையை எப்படிச் செய்வார் என்பதை பகிர்ந்துக் கொள்ள மறுத்துவிட்டார்.

மேலும் அதைச் செய்வதற்கான திறமையும் சரியான குழுவும் தன்னிடம் இருப்பதாக மட்டுமே கூறினார்.

இந்த வேலையைச் செய்ய வேண்டிய தேதி மற்றும் நேரத்தைச் சொல்லுமாறு 
அவர் நிறுவனத்திடம் கேட்டார்.அந்த நாள் இறுதியாக வந்தது.  

ஒவ்வொரு ஊழியரும், மேலாளரும், நிறுவனத்தின் முதலாளியும், சுற்றியிருந்தவர்களும் கூட, அந்த மனிதன் இந்த வேலையை எப்படிச் செய்வான் என்று தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருந்தனர். அவர் தளத்தில் எந்தத் தயாரிப்பும் செய்யவில்லை.

சரி, முடிவு செய்த நேரத்தில், நிறைய லாரிகள் அந்தத் தளத்தை அடைய ஆரம்பித்தன. அந்த லாரிகள் அனைத்தும் பனிக்கட்டிகளால் ஏற்றப்பட்டிருந்தன, அவை அனைத்தும் குழிக்குள் நிரப்பப்பட்டன.

குழி முழுவதுமாக பனியால் நிரம்பியதும், இயந்திரத்தை நகர்த்தி பனி அடுக்குகளின் மேல் வைத்தனர். இதற்குப் பிறகு, ஒரு சிறிய தண்ணீர் பம்ப் சுவிட்ச் ஆன் செய்யப்பட்டு, குழியில் ஒரு குழாய் செருகப்பட்டது.

இதனால் தண்ணீர் வெளியே எடுக்கப்பட்டது. பனி உருகியது, தண்ணீர் தொடர்ந்து கொட்டியது, இயந்திரம் கீழே செல்லத் தொடங்கியது.

 4-5 மணி நேரத்திற்குள் வேலை முடிந்து மொத்த செலவு ரூ.1 லட்சத்திற்கும் குறைவாகவே வந்தது.

இயந்திரம் கச்சிதமாக பொருத்தப்பட்டு, 
அந்த நபருக்கு ரூ.4 லட்சத்துக்கு மேல் 
லாபம் கிடைத்தது.

வணிகம் உண்மையில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம். பிரச்சினைக்கு எளிய தீர்வைக் கண்டறிவது ஒரு கலையாகும், இது மனிதனின் விவேகம், புத்திசாலித்தனம் மற்றும் நடைமுறை புரிதலைப் பொறுத்தது.

கஷ்டமான பிரச்சனைகளுக்குக் கூட விவேகத்தின் மூலம் எளிய தீர்வுகள் கிடைக்கும்...

கதையின் நீதி :-

அடுத்தவன் ஆயிரம் சொல்லுவான் நம்மை ஆயிரம் குறை சொல்பவன் வந்து நம்ம வாழ்க்கையை வாழப் போவதில்லை. நாம் மட்டும் தான் நம்முடைய வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும். எப்போவுமே நமக்கும் நம்ம மனசாட்சிக்கும் நாம் உண்மையாக இருந்தால் மட்டும் போதும்.
குரைக்கின்ற அனைத்து நாய்களுக்கும் நாம் பயந்தோமேயானால் நம்மால் நிச்சயமாக அடுத்தக்கட்ட நிலைக்கு முன்னேறிப் போகவே முடியாது...

படித்ததில் பிடித்தது...

What is will?

அடிப்படை சட்ட விழிப்புணர்வு......

*DEFINE WILL.....?

 உயில் என்பது என்ன ?*.....ஒரு சிறு பார்வை.....

ஒரு மனிதர் - தனது வாழ் நாளுக்கு பின் தனது சொத்து  மற்றும் வங்கி கணக்கில் உள்ள பணம் உள்ளிட்ட அனைத்தும் யார் யாருக்கு தர வேண்டும் என விரும்புகிறாரோ - அதனை எழுதி வைப்பது தான் உயில். உயிருடன் இருக்கும் போது எழுதப்படும் இந்த தனி மனிதரின் விருப்பம் - அவரது மறைவுக்கு பின் தான் அமல் படுத்தப்படும்.


சுய  சம்பாத்தியத்தில் வந்தவை மட்டும் தான் உயில் எழுத முடியுமா ?

சுய  சம்பாத்தியத்தில் வந்தவை மற்றும் தனது பெற்றோர் மூலம் - சட்டப்படி ஒருவருக்கு வந்த சொத்துக்கள் இவற்றை உயில் மூலம் மாற்றம் செய்ய முயும்.

வயதானவர்கள் மட்டும் தான் உயில் எழுதுவது அவசியமா ?

அப்படி இல்லை. மரணம் எப்போது வேண்டுமானாலும், எந்த வடிவிலும் ஒருவருக்கு வரக்கூடும் என்பதால் - மத்திய வயதில் இருப்போரும் கூட உயில் எழுதி வைப்பது நல்லது. உயில் எழுதாத பட்சத்தில் - உங்கள் உறவினர்களில் - நீங்கள் விரும்பாத  சிலருக்கு கூட உங்கள் சொத்தில் ஒரு பகுதி செல்லக்கூடும். மாறாக நீங்கள் சம்பாதித்த சொத்தை நீங்கள் விரும்பினால் - ஒரே ஒரு  நபருக்கு கூட செல்லுமாறு உயில் மூலம் செய்யலாம்.  

மேலும் உங்கள் சொத்தில் ஒரு பங்கை உங்கள் காலத்துக்கு பின் Charity - க்கு செல்ல வேண்டுமென நினைத்தால் - அது உயில் எழுதி வைத்தால் தான் சாத்தியமாகும். இல்லாவிடில் வாரிசு தாரர்கள் மட்டுமே சொத்தை பிரித்து கொள்வர்.

ஒரு உயில் எப்படி எழுதப்பட வேண்டும் ? அதனை ரிஜிஸ்தர் செய்வது எப்படி ?

உயில் ஒரு மனிதனின் விருப்பம் என்ற அளவில் - எப்படி /  எந்த format -ல்  வேண்டுமானாலும் எழுதப்படலாம்.

உயிலை ரிஜிஸ்தர் செய்வது சட்டப்படி கட்டாயம் இல்லை. ஆயினும் - அதன் நம்பகத்தன்மையை சிலர் சந்தேகிக்கலாம் என்ற அளவில் - ரிஜிஸ்தர் செய்வது நல்லது.

தனது உயிலை ஒருவர் எழுதி முடித்து விட்டு தனது கையொப்பம் இட்டபின் - கட்டாயம் இருவர் சாட்சி கையெழுத்திட வேண்டும். இப்படி சாட்சி கையெழுத்திடுவோர் - தங்கள் முன் உயிலை எழுதியவர் கையொப்பம் இட்டார் என்பதற்கு மட்டுமே கையெழுத்து இடுகிறார்கள். உயிலை முழுவதும் அவர்கள் வாசிக்க வேண்டுமென்று அவசியம் இல்லை.

இதன் பின் உயில் சப் ரிஜிஸ்தர் அலுவலகத்தில் ரிஜிஸ்தர் செய்யலாம். உயிலை ரிஜிஸ்தர் செய்ய மிக மிக குறைந்த கட்டணமே (அதிக பட்சம் ரூ. 500 ) வாங்கப்படுகிறது.

நாம் ஒரு  முறை எழுதிய உயிலை மாற்றி எழுத முடியுமா ? ஒருவர் பல உயில் எழுதினால் - எது எடுத்து கொள்ளப்படும் ?

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் உயிலை மாற்றி எழுதலாம். எந்த உயில் கடைசியாக ஒருவரால் எழுதப்பட்டதோ, அதுவே  அவரின் இறுதி உயிலாக எடுத்து கொள்ளப்படும்

உயிலை முழுவதும் மாற்றி எழுதாமல் சில பகுதிகளை மட்டும் மாற்ற முடியுமா ?....

முடியும். குறிப்பாக ஒருவர் உயில் எழுதிய பின்  புதிதாக வேறு சொத்துகள் வாங்கியிருக்கலாம். அல்லது ஏற்கனவே எழுதிய ஒரு சொத்தை - இன்னொருவருக்கு மாற்றி எழுதலாம். இந்நேரங்களில் உயிலின் ஒரு பகுதியில் மட்டும் மாற்றம் செய்யப்படும். அல்லது புதிதாக உள்ள சொத்து யாருக்கு சேரவேண்டும் என எழுதப்படலாம். இதற்கு "Codicil " என்று பெயர். உயில் மற்றும் Codicil இரண்டும் சேர்ந்து ஒருவரின் உயிலாக கொள்ளப்படும்.

ஒருவருக்கு உயில் மூலம் எழுதி வைத்த சொத்தை, உயில் எழுதியவர் பின்னர் விற்க முடியுமா ?

உயில் என்பது ஓருவரின் இறப்புக்கு பின் தான் நடைமுறைக்கு வருகிறது. எனவே - அவர் இறக்கும் வரை அந்த சொத்தை அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதனை அவர் தாரளாமாக பிறருக்கு விற்கலாம். அல்லது வேறு யாருக்கேனும் கூட மாற்றி எழுதலாம்.

இஸ்லாமியர்கள் தங்கள் சொத்து முழுமையும் உயில் மூலம் எழுத முடியுமா ?

முடியாது. ஒரு இஸ்லாமியர் தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே உயில் மூலம் எழுத முடியும். மீதமுள்ள 2/3 பங்கு - அவரது வாரிசு தாரகளுக்கு இஸ்லாமிய சட்டத்தின் படி தான் சென்று சேரும்.

உயிலை நடைமுறைப்படுத்த கோர்ட் அனுமதி பெறவேண்டுமா ?

உயிலில் உள்ள விஷயங்களை கோர்ட் ஒரு முறை அங்கீகரிக்கும் வழக்கம் இந்தியாவில் மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னையில் உள்ள சொத்துக்களுக்கு மட்டும்  அவசியமாகும். போலவே இந்த 3 நகரங்களிலும் இருந்தபடி ஒருவர் உயில் எழுதினர் எனில் - அவர் உயில் மூலம் எழுதும் சொத்து வேறு ஊரில் இருந்தாலும் கூட கோர்ட் அப்ரூவல் பெறுவது அவசியமாகிறது. இந்த நடைமுறையை ப்ரொபேட் (PROBATE) என்று அழைப்பார்கள்.

ப்ரொபேட் தேவைப்படும் நேரங்களில் சம்பந்தப்பட்டவர்கள் கோர்ட்டுக்கு விண்ணப்பித்து ப்ரொபேட் பெற்றபின் தான் சொத்து - சட்டப்படி அவருக்கு வந்து சேரும்

Executor மற்றும் Beneficiary என்பவர்கள் யார்?

தனது சொத்துக்களை உயில் மூலம் எழுதி வைக்கும்  நபர் Testator எனப்படுவார்.

சொத்தில் யார் யாருக்கெல்லாம் உரிமை/ பங்கு உள்ளதாக அவர் குறிப்பிடுகிறாரோ அவர்கள் Beneficiary எனப்படுவர்.

ஒருவர் எழுதிய உயிலை அவரது மரணத்துக்கு பின் நிர்வகித்து அனைவருக்கும் உயிலில் உள்ளபடி சொத்துக்கள் சென்று சேரும்படி நடவடிக்கை எடுப்பவர்  Executor என அழைக்கப்படுவார்.

ஒருவர் தனது உயிலிலேயே - Executor யார் என குறிப்பிடுவது மிகவும் நல்லது.

நாம் எழுதும் உயில் யாருக்கும் தெரியாமல் இருக்குமாறு பார்த்து கொள்ளும் வசதி உள்ளதா ?

ஆம்; அப்படியொரு வசதி இருக்கிறது. எந்த சப் ரிஜிஸ்தர் அலுவலகத்தில் உயிலை நாம் பதிவு செய்கிறோமோ, அங்கேயே குறிப்பிட்ட தொகை செலுத்தினால், சப் ரிஜிஸ்தர் அதனை பத்திரமாக பாதுகாப்பார். அவர் ரீசீப்ட்- டை நமது வாரிசு தாரர்களிடம்  தந்து வைத்து விடலாம். 

நமது இறப்பிற்கு பின் அந்த ரீசீப்ட் மற்றும் நமது இறப்பிற்கான சான்று காட்டி - நமது வாரிசு தாரர்கள் நமது உயிலை பெற்று கொள்ளலாம்..





Registration act sec 22A clarification

பாகம் மற்றும் செட்டில்மெண்டு ஆவணங்களில் சொத்தை பல பிரிவாக பிரித்து அளிக்க முடியும்.
மொத்தமே 10 செண்டுக்கு குறைவாக நிலம் உரிமையாகி அருகில் வேறு நிலம் இல்லாத நிலையில் மனையிடமாக ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு பிரித்து மனையாக பதிவு செய்யப்படும்போது பதிவுச் சட்டம் பிரிவு 22 A (2) க்கு முரணாக இருக்காது என அரசின் தெளிவுரை உள்ளது.
ஏற்கனவே தெரு (அ) ரோட்டை ஒட்டியுள்ள அதிக பரப்புள்ள நிலத்தில் பல பிரிவுகளாக மனையாக (ஒவ்வொரு மனைக்கும் ஒரு எல்லையாக ரோடு இருக்க வேண்டும் சொத்து உரிமையாளரால் ரோடு (அ) பாதை விட்டிருக்கக்கூடாது. இதனை உறுதிப்படுத்த முன் ஆவணத்தில் நில உரிமையாளருக்கு சொத்து கிடைக்கப்பெற்ற ஆவணத்திலேயே ரோடு ஒரு எல்லையாக குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும் (அ) FMB ல் ரோடு காண்பிக்கப்பெற்றிருக்கவேண்டும்.) பிரித்து அளிக்கலாம்.
ஒவ்வொரு மனையுடன் வீடு கட்டி பல ஆண்டுகள் ஆகியிருந்தால் ஒவ்வொருவருக்கும் மனையும் வீடும் என எழுதிக் கொடுக்கலாம்.
மேற்கண்டவாறு இருந்தால் பதிவுச் சட்டம் பிரிவு 22A (2) க்கு முரணாக இருக்காது.
விடுதலை ஆவணத்தைப் பொறுத்து ஏற்கனவே உள்ள மொத்த சொத்தில் ஒருவருக்குள்ள (அ) ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்குள்ள உரிமையினை மொத்த சொத்தில் வாரிசுரிமைப்படி (அ) கூட்டுரிமையாளர் என்ற முறையில் பாத்தியம் உடையவருக்கு எழுதிக் கொடுப்பதால் ஏற்கனவே முன்பதிவு ஆவணத்தில் (அ) பட்டாவில் உள்ள முழு சொத்தினை எழுதும்போது பல பிரிவுகளாக பிரித்து எழுதவேண்டிய நிலை இல்லாததால் முன்பதிவில் மனையாக குறிப்பிடப்படாத நிலையில் விடுதலை ஆவணத்திலும் மனையாக குறிப்பிட முடியாது என்பதால் பதிவுச் சட்டம் பிரிவு 22 A (2) எழாது.

Release and partition

தந்தை உயிருடன் இருக்கும்போது அவர் தன் மக்களுடன் பாகம் பிரித்துக்கொள்ளும் ஆவணம், தந்தை (அ) தாய் இறந்தபின்னர் வாரிசுரிமைப்படி பாத்தியம் உள்ளவர்களுக்கிடையிலான பாக ஆவணம் இமுச கூறு 45(a)ன் கீழான பாக ஆவணம் என வகைப்படுத்தலாம்..
ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு செட்டில்மெண்டு, உயில், கிரையம் மூலம் பாத்தியப்பட்டிருந்து அவர்களுக்கிடையிலான உறவுமுறை குடும்ப உறுப்பினர் என்ற வரையரைக்குள் இல்லையென்றால் இமுச கூறு 45 (b) ன் கீழான பாகமாக வகைப்படுத்த வேண்டும்.
பாகம் பிரித்துக்கொள்பவர்களுக்கிடையிலான உறவுமுறை குடும்ப உறுப்பினர் என்ற வரையறைக்குள் வரவில்லை எனில் இமுச கூறு 45 (a) பொருந்தாது என உயர்நீதிமன்ற ஆணைகள் உள்ளன.
  தந்தை(அ) தாயார் இறந்தபின் அவர்களுடைய சொத்துக்களில் வாரிசுரிமைப்படி பாத்தியம் உடைய ஒரு வருக்கோ (அ) ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கோ பாத்தியம் உள்ளவர்(கள்)(அ) பாத்தியம் இல்லாதவர் (கள்) எழுதிக் கொடுக்கும் விடுதலை ஆவணம் எழுதிக் கொடுப்பவருக்கும் எழுதிப் பெறுபவருக்கும் இடையிலான உறவுமுறையினைக் கருத்தில் கொள்ளாமல் இமுச கூறு 55 A யின் கீழான விடுதலையாக முடிவு செய்ய வேண்டும்.

குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து கிரையம் (அ) செட்டில்மெண்டு மூலம் அடையப்பெற்றிருந்தால் ஒருவருக்கோ(அ) ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கோ மற்றவர்(கள்) எழுதிக் கொடுக்கும் விடுதலை ஆவணத்தையும் இமுச கூறு 55 A யின் கீழ் வகைப்படுத்தலாம்.
குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து வாங்கி ஒருவர் இறந்தபின் அவருடைய வாரிசுகள் மற்றவருக்கு எழுதிக் கொடுக்கும் விடுதலை ஆவணத்தையும் குடும்ப நபர் அல்லாதவர்கள் சேர்ந்து வாங்கிய சொத்துக்களை ஒருவர் மற்றவருக்கு விடுதலை கொடுக்கும் ஆவணத்தையும் இமு ச கூறு 55Cயின் கீழான விடுதலை ஆவணமாகவே முடிவு செய்ய வேண்டும்.
பூர்வீகமாகவோ(அ) ஒரு ஆவணப் படியோ சொத்து ஒருவருக்கு பாத்தியமாயிருந்து வேறொரு ஆவணப்பதிவு .(அ) பட்டா மூலம் பாத்தியமானதாக இருந்து அந்த உரிமையை விடுதலை செய்து கொடுக்கும் ஆவணத்தை இமு சகூறு 55Cயின் கீழான விடுதலையாக முடிவு செய்ய வேண்டும். சில நேர்வுகளில் முழு சொத்துமதிப்பிற்கும் 7% முத்திரைத் தீர்வையும் 4% பதிவுக் கட்டணமும் விதிக்க வேண்டிவரும்,

partition and settlement

பாகம் மற்றும் செட்டில்மெண்டு ஆவணங்களில் சொத்தை பல பிரிவாக பிரித்து அளிக்க முடியும்.
மொத்தமே 10 செண்டுக்கு குறைவாக நிலம் உரிமையாகி அருகில் வேறு நிலம் இல்லாத நிலையில் மனையிடமாக ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு பிரித்து மனையாக பதிவு செய்யப்படும்போது பதிவுச் சட்டம் பிரிவு 22 A (2) க்கு முரணாக இருக்காது என அரசின் தெளிவுரை உள்ளது.
ஏற்கனவே தெரு (அ) ரோட்டை ஒட்டியுள்ள அதிக பரப்புள்ள நிலத்தில் பல பிரிவுகளாக மனையாக (ஒவ்வொரு மனைக்கும் ஒரு எல்லையாக ரோடு இருக்க வேண்டும் சொத்து உரிமையாளரால் ரோடு (அ) பாதை விட்டிருக்கக்கூடாது. இதனை உறுதிப்படுத்த முன் ஆவணத்தில் நில உரிமையாளருக்கு சொத்து கிடைக்கப்பெற்ற ஆவணத்திலேயே ரோடு ஒரு எல்லையாக குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும் (அ) FMB ல் ரோடு காண்பிக்கப்பெற்றிருக்கவேண்டும்.) பிரித்து அளிக்கலாம்.
ஒவ்வொரு மனையுடன் வீடு கட்டி பல ஆண்டுகள் ஆகியிருந்தால் ஒவ்வொருவருக்கும் மனையும் வீடும் என எழுதிக் கொடுக்கலாம்.
மேற்கண்டவாறு இருந்தால் பதிவுச் சட்டம் பிரிவு 22A (2) க்கு முரணாக இருக்காது.
விடுதலை ஆவணத்தைப் பொறுத்து ஏற்கனவே உள்ள மொத்த சொத்தில் ஒருவருக்குள்ள (அ) ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்குள்ள உரிமையினை மொத்த சொத்தில் வாரிசுரிமைப்படி (அ) கூட்டுரிமையாளர் என்ற முறையில் பாத்தியம் உடையவருக்கு எழுதிக் கொடுப்பதால் ஏற்கனவே முன்பதிவு ஆவணத்தில் (அ) பட்டாவில் உள்ள முழு சொத்தினை எழுதும்போது பல பிரிவுகளாக பிரித்து எழுதவேண்டிய நிலை இல்லாததால் முன்பதிவில் மனையாக குறிப்பிடப்படாத நிலையில் விடுதலை ஆவணத்திலும் மனையாக குறிப்பிட முடியாது என்பதால் பதிவுச் சட்டம் பிரிவு 22 A (2) எழாது.

Important Gos

*முக்கியச் செய்தி*
போலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை உடனடியாக ரத்து செய்து சொத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு இந்திய குடிரசுத் தலைவர் ஒப்புதல். சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்து விட்டது!
பாதிக்கப்பட்டவர்கள் விழித்துக் கொண்டு இழந்த சொத்தை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கலாம்! நிலத் தகராறு, 
பட்டா மாறுதல் போன்ற வழக்குகளில், நீதிமன்றங்கள் வழங்கி இருக்கின்ற தீர்ப்புகள்.

நீங்கள் பதிவு இறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். 

எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்கு, 
உங்கள் நண்பர்களுக்கு தகவலை தெரிவிக்கவும்.

(Land Disputes)

1. வழக்கு நிலுவையில் இருக்கும் போது 
பட்டா மாறுதல் போன்ற நடவடிக்கைகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபடக்கூடாது.

நில நிர்வாக ஆணையர் - கடித எண் - K3/27160/2018, dt - 13.3.2018

சென்னை உயர்நீதிமன்றம் - W. P. No - 24839/2014, dt - 16.7.2018
W. P. No - 491/2012, dt - 4.6.2014
W. P. No - 16294/2012, dt - 4.4.2014

2. சொத்தின் பத்திரம் உரிமையாளர் பெயரில் இருந்தால், 
அவரிடமே சொத்தின் உரிமை மூலம் இருப்பதாகக் கருத வேண்டும். 
மற்றவர்களுக்கு பட்டா மாறுதல் செய்தால் அது தவறு.

S. A. No - 313 & 314/2008, dt - 11.2.2019

3. விஏஓக்கள் திருட்டுத்தனம் குறித்து ஆய்வு செய்ய,
ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க வேண்டும். 
தவறு செய்யும் விஏஓக்களை 
பணி நீக்கம் செய்ய வேண்டும்.

W. P. No - 13916/2019, dt - 1.7.2019

4. சொத்தின் உரிமையாளர் யார் என்பதை 
வருவாய்த் துறையினர் தீர்மானிக்க முடியாது. 
உரிமை இயல் நீதிமன்றத்திற்கே அந்த அதிகாரம் உள்ளது.

W. P. No - 18489/2009, dt - 1.7.2011

5. பட்டா உரிமையைக் காட்டக்கூடிய ஆவணம் கிடையாது. 
பதிவு ஆவணம் எதுவும் இல்லாமல் பட்டாவை வைத்து மட்டும் ஒருவர் தான்தான் உரிமையாளர் என்று கூற முடியாது.

S. A. No - 84/2006, dt - 1.9.2015 மதுரை உயர்நீதிமன்றம்

6. பட்டா சொத்தின் உரிமையை காட்டக்கூடிய ஆவணம் கிடையாது. 
பட்டாவை வைத்து சொத்தில் உரிமை ஏதும் கோர முடியாது.

S. A. No - 2060/2001, dt - 2.11.2012
S. A. No - 1715/1989, dt - 25.6.2002
W. P. No - 16294/2012, dt - 3.4.2014

7. கிராம நத்தம் நிலத்தில் அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது. 
நத்தம் நிலத்தில் நீண்ட காலமாக வீடு கட்டிக் குடியிருந்து வருபவர்களுக்கு 
பட்டா வழங்க வேண்டும்.

Madras High Court
W. P. No - 18754, 20304, 2613/2005
DT - 4.11.2013
 A. K. Thillaivanam Vs The District collector, Chennai Anna District (2004 - 3 - CTC - 270)
The executive officer, Kadathur town panjayath Vs V. S. Swaminathan (2012 - 2 - CTC - 315)

8. பட்டா பெயர் மாற்றம் செய்ய 
நீண்ட காலதாமதம் செய்தால் அந்த அதிகாரிக்கு தண்டம் விதிக்கப்படும். 
W. P. No - 19428/2020, dt - 6.1.2021 (K. A. Ravichandran Vs The District collector, Vellore and others) 

9. போலி பட்டா வழங்கும் அதிகாரிகளை
பணி நீக்கம் செய்ய வேண்டும். 

W. P. No - 11279/2015, dt - 22.3.2019, madurai high court 

10. பட்டாவில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய வட்ட ஆட்சியருக்கே அதிகாரம் உண்டு. வருவாய் கோட்ட ஆட்சியா் 
பட்டா மாற்றம் செய்ய முடியாது. ஆனால், கோட்ட ஆட்சியா் முதல் மேல்முறையீடு அலுவலர் ஆவார்.

T. R. தினகரன் Vs RDO (2012 - 3 - CTC - 823)
அம்சவேணி Vs DRO மதுரை. W. P No - 16294/2012...

கடந்த பல ஆண்டுகளாக, சென்னை உயர்நீதிமன்றம், தில்லி உச்சநீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் வழங்கிய, இதுபோன்ற தீர்ப்புகளை, பதிவுகளை
 
மக்களுக்கு விழிப்பு உணர்வு
ஏற்படுத்துங்கள்.

Registration act amendment Sec 77A

*பதிவுச்சட்டம் (தமிழ்நாடு இரண்டாவது திருத்தச் சட்டம்),2021 உடனடியாக அமலுக்கு வந்தது*

தமிழக அரசால் 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டுவரப்பட்ட மசோதாவிற்கு இந்திய ஜனாதிபதி அவர்களால் கடந்த 06.08.2022ம் தேதி அன்று இசைவு வழங்கப்பட்டு கடந்த 16.08.2002ம் தேதி அன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது.

*கொண்டுவரப்பட்ட ஐந்து திருத்தங்கள்:*

1. *புதிய பிரிவு 22-B* - *போலி ஆவணங்கள் மற்றும் சட்டத்தால் தடை செய்யப்பட்ட பிற ஆவணங்களை பதிவிற்கு மறுத்தல்*

இதன்படி கீழ்கண்ட ஆவணங்கள் பதிவு செய்வதற்கு பதிவு அலுவலர் மறுக்க வேண்டும்.
i) போலியாவணங்கள். அதாவது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 470ல் வரையறுக்கப்பட்டுள்ள அதே அர்த்தம் கொண்டுள்ள ஆவணங்கள்.
ii) மத்திய அல்லது மாநில அரசால் பரிமாற்றத்திற்கு தடை செய்யப்பட்டு, அந்த தடை செயல்படுத்தும் நிலையில் உள்ள காலம் வரையில், அந்த தடை சம்பந்தப்பட்ட பரிமாற்ற ஆவணங்கள்.
iii) எந்த ஒரு நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயத்தினாலோ, மாநில அல்லது மத்திய அரசு சட்டத்தினால் உருவாக்கப்பட்ட அதிகார அமைப்பு அது செயல்படும் நிலையில் உள்ள காலத்திற்குள்ளாக அந்த அதிகார அமைப்பினாலோ, தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக, ஜப்தி /பற்றுகை செய்யப்பட்ட அசையா சொத்துக்களை விற்பனை, தானம், குத்தகை அல்லது வேறு வகையில் பரிமாற்றம் செய்யும் ஆவணங்கள்.
iv) மாநில அரசால் அறிவிப்பு மூலம் குறிப்பிடப்பட்ட எந்த ஒரு ஆவணமும்.

2. *புதிய பிரிவு 77-A* - *சில நேர்வுகளில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்தல்*

(1)பதிவாளர், தானாகவோ அல்லது ஏதாவது ஒரு நபரிடமிருந்து பெறும் புகாரின் அடிப்படையிலோ, ஏற்கனவே உள்ள பிரிவு 22ஏ (அங்கீகரிக்கப்படாத மனை பிரிவுகளை பதிவதற்கு தடை செய்யும் பிரிவு) மற்றும் பிரிவு 22 பி (மேற்சொன்ன புதிய பிரிவு) ஆகிய பிரிவுகளில் சொல்லப்பட்டிருப்பதை மீறி பதியப்பட்டுள்ளது என்று கருதும்பட்சத்தில் 'ஆவணத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது' என்று விளக்கம் கேட்டு எழுதிக் கொடுத்தவருக்கும், ஆவணம் சம்பந்தப்பட்ட அனைத்து கட்சிக்காரர்களுக்கும் மற்றும் தொடர்ந்து ஆவணங்கள் இருப்பின் அதன் கட்சிக்காரர்களுக்கும் மற்றும் அந்த ஆவணத்தை ரத்து செய்வதால் பாதிக்கப்படுபவர்கள் என்று பதிவாளர் கருதும் நபர்கள் அனைவருக்கும் அறிவிப்பு அனுப்ப வேண்டும். பதில் ஏதும் வந்திருப்பின் அதனை சீர்தூக்கி பார்த்து பதிவாளர் அந்த ஆவணத்தை ரத்து செய்யலாம் மற்றும் அதற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட புத்தகங்களிலும் அட்டவணைகளிலும் உட்பகுத்த வேண்டும்.

(2)ஆவணத்தை ரத்து செய்யும் இந்த அதிகாரத்தை பதிவுத்துறை தலைவர் அவர்களும் உபயோகிக்கலாம்.

3. *புதிய பிரிவு 77-B* - *மேல்முறையீடு*

(1) பிரிவு 77-A(1)ன் படி பதிவாளரின் உத்தரவினால் இடருற்ற எந்த ஒரு நபரும் ஆவணம் ரத்து செய்யப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் பதிவுத்துறை தலைவர் அவர்களுக்கு மேல்முறையீடு செய்து விண்ணப்பிக்கலாம். பதிவாளரின் உத்தரவினை உறுதி செய்தோ, திருத்தம் செய்தோ அல்லது ரத்து செய்தோ பதிவுத்துறை தலைவர் அவர்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

(2) பிரிவு 77-A(2)ன் படி பதிவுத்துறை தலைவர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால், மேல்முறையீட்டினை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 30 நாட்களுக்குள்ளாக அரசிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

4. *புதிய பிரிவு 81-A* - *பிரிவுகள் 22ஏ மற்றும் பிரிவு 22பி இவற்றை மீறி ஆவணங்களை பதிவு செய்வதற்கான தண்டனை*

(1)இந்தச் சட்டத்தின் கீழ் பதிவதற்காக தாக்கல் செய்யப்படும் ஆவணங்களை பதிவதற்காக வேண்டி பொறுப்புடைய நபரான, இந்த சட்டத்தின் கீழ் நியமனம் செய்யப்பட்ட அனைத்து பதிவு அலுவலர்களும் மற்றும் அவரால் இந்தச் சட்டத்தின் காரணங்களுக்காக வேலையில் அமர்த்தப்பட்ட எந்த ஒரு நபரும் பிரிவு 22ஏ மற்றும் பிரிவு 22 பி ஆகியவற்றில் கூறியுள்ளவற்றிற்கு மாறாக ஆவணங்கள் பதிவு செய்திருந்தால், *மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும்*.

(2)நல்லெண்ணத்தின் காரணமாக பதியப்படும் ஆவணத்திற்கு இந்த பிரிவில் கூறப்பட்டுள்ளவைகள் பொருந்தாது.

*விளக்கம்:
"நல்லெண்ணம்"* என்ற சொல்லின் பொருளானது, ஒரு நபரால் நல்ல எண்ணத்தில் தகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் மற்றும் பொறுப்புணர்ச்சிடனோ அல்லது உண்மையை தவறாக புரிந்து கொண்டதால் இந்திய தண்டனைச் சட்டம் 1860 பிரிவு 79 இன் கீழ் 'சட்டத்தால் நியாயப்படுத்தக் கூடியது' என்று தன்னைத்தானே நம்பிக் கொண்டோ நம்பப்பட்ட அல்லது செய்யப்பட்ட எந்தவொரு செயல் ஆகும். 

5. *புதிய பிரிவு 81-B* - *நிறுவனத்தால் செய்யப்படும் குற்றங்கள்*

(1)இந்த சட்டத்தினால் குற்றம் என்று சொல்லப்பட்டது ஒரு நிறுவனத்தால் செய்யப்பட்டிருக்குமாயின், அந்த குற்றம் செய்யப்பட்ட நேரத்தில் அந்த நிறுவனத்திற்கு பணிப்பொறுப்பில் இருந்த, பொறுப்புடையவர்களான ஒவ்வொரு நபர்களும் மற்றும் அந்த நிறுவனமும் குற்றம் புரிந்தவர்களாக கருதப்பட்டு, தொடர்ந்து எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு ஏற்றவாறு தண்டிக்கப்படக்கூடிய வகையில் பொறுப்புடையவர்களாக்கப்படுவர்.

*நிபந்தனையாக*, இந்த உட்பிரிவில் கூறப்பட்ட எதுவும் ஒரு நபரை குற்றத்திற்கு பொறுப்புடையவராக்காது, அது எப்போதென்றால் அந்த நபர் குற்றம் நடைபெற்ற உண்மை தனக்குத் தெரியாமல் நடந்துவிட்டது என்றோ அல்லது அவர் அந்த குற்றம் நடைபெறாமல் தடுக்க அனைத்து தகுந்த முயற்சியை கையாண்டுள்ளார் என்றோ நிரூபித்திருத்தல் வேண்டும்.

(2) இந்த உட்பிரிவு 1ல் எவ்வாறு கூறப்பட்டிருப்பினும், இந்த சட்டத்தினால் குற்றம் என்று சொல்லப்பட்டது ஒரு நிறுவனத்தால் செய்யப்பட்டு, அந்த குற்றம் எந்தவொரு இயக்குநர், செயலாளர், நிர்வாகி அல்லது பிற அதிகாரியின் சம்மதத்துடன் அல்லது கண்டும் காணாதிருத்தலினால் அல்லது அவர்களின் அலட்சியத்தின் காரணமாக செய்யப்பட்டது நிரூபிக்கப்பட்ட நிலையில் அந்த இயக்குநர், செயலாளர், நிர்வாகி அல்லது பிற அதிகாரி குற்றம் புரிந்தவராக கருதப்பட்டு, தொடர்ந்து எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு ஏற்றவாறு தண்டிக்கப்படக்கூடிய வகையில் பொறுப்புடையவர்களாக்கப்படுவர்.

*விளக்கம்:* இந்த பிரிவின் நோக்கத்திற்காக,
(a) நிறுவனம் என்பது ஒரு நிறுவனம் அல்லது பிற தனிநபர்களின் கூடுதல் இவற்றை உள்ளடக்கிய கூட்டுருக் குழுமம் ஆகும்.
(b) நிறுவனத்தின் இயக்குநர் என்பது ஒரு நிறுவனத்தைப் பொறுத்தவரையில் அந்த நிறுவனத்தின் தொழில் கூட்டாளி ஆவார்.

--------------முற்றும்--------------------

Adjudication

வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் அதிகார ஆவணம் எழுதிக் கொடுத்து அது இந்தியாவில் முதன்முதலில் பெறப்பட்ட மூன்று மாதங்களுக்குள் மு.ச பிரிவு 31ன் படி தீர்வு (Adjudication )க்காக தாக்கல் செய்யப்பட்டால் அது தேவையான முத்திரைத்தாளில் இருந்தாலும் (அல்லது) உரிய முத்திரைத் தீர்வைக்குரிய தொகை செலுத்தப்பட்டால் தீர்வுக் கட்டணம் வசூலித்துக்கொண்டு தீர்வு செய்யப்பட்டு மு.ச.பிரிவு 32ன் கீழான சான்றுசேர்த்து வழங்கப்படும். இந்த ஆவணம் பதிவு செய்யப்பட முடியாது.
இம்மாதிரியான ஆவணத்தை ரத்து செய்ய விரும்பும் முதல்வர் "இன்ன தேரியில் இன்னாரை பொது அதிகார முகவராக நியமித்து எழுதிக் கொடுத்த பொது அதிகார ஆவணம் இன்ன அலுவலகத்தில் தீர்வு எண்....ஆக தீர்வு செய்யப்பட்ட ஆவணத்தை ரத்து செய்கிறேன்" என தெரிவித்து அறிவிப்பு (intimation) ஒன்றினை சொத்து அமைந்துள்ள இடம்சார்ந்த சார்பதிவாளருக்கு அனுப்பவேண்டும். இந்த அறிவிப்புக்கு பதிவுக் கட்டணப் பட்டியல் கூறு 17 .1 (e) படி கட்டணம் ரூ 10/ம் (எந்த வழியிலாவது) செலுத்தப்பட வேண்டும்.
இந்த அறிவிப்பினை பெறும் சார்பதிவாளர் பதிவு விதி 52 (ii) (a) படி பராமரிக்கப்படும் (படிவம் 15 Part II Manual page 762) அதிகார ரத்து குறித்த பதிவேட்டில் (Register of Revocation of Power of attorney ) பதிவு செய்ய வேண்டும்.
அந்த முதல்வரால் ஆவணம் ஏதும் தாக்கல் செய்யப்பட்டால் பதிவுக்கு அனுமதிக்கப்படக்கூடாது.
" வெளிநாட்டில் கையொப்பம் செய்யப்பட்ட ஆவணமாக இருந்தால் இந்திய பதிவுச் சட்டம் பிரிவு 31, 32, 33ல் தெரிவித்தவாறு ரத்து ஆவணம் இந்திய தூதரக அதிகாரி (அ) பொது அத்தாட்சியாளர் (Notary Public ) முன்பாக எழுதிக் கொடுக்கப்பட்டு பதிவுச் சட்டம் பிரிவு 31, 32, 33ன் கீழ் அத்தாட்சி செய்யப்பட்டால் மட்டுமே அதனை அங்கீகரிக்க வேண்டும்" என பது த சுற்நறிக்கை எண் 42938/இ1 /2009 நாள் 18.12.2009ல் கண்ட தெளிவுரை 11ல் உள்ளது. 
வெளிநாட்டில் இருப்பவர் வேறு ஒருவருக்கு அதிகாரம் கொடுத்து அதில் முந்தைய அதிகாரத்தை ரத்து செய்வதாக இருந்தால் மட்டுமே, இந்த ஆவணத்தை முகவர் உரிய அலுவலகத்தில் மு.ச பிரிவு 31ன் கீழ் தாக்கல் செய்து தீர்வு பெறலாம்.
இதனை பதிவு செய்ய முடியாது என்பதோடு மட்டுமின்றி முந்தைய ஆவணம் ரத்து செய்யப்பட்டது குறித்து எதிலும் குறிப்புகள் இடம்பெறாது என்பதால் இதுகுறித்து பது த விடம் தெளிவுரை கோரலாம்.

பஞ்சமி நிலங்கள்

பஞ்சமி_நிலம்⚖👨‍🎓
-----------------------------

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட நிலம் சுமார் 12 லட்சம் ஏக்கர் எனத் தெரியவந்துள்ளது. அந்த நிலங்களை தலித் மக்கள் சாகுபடி செய்ய மிராசுதார்கள் அனுமதிக்கவில்லை. பலவிதங்களிலும் தொந்தரவுகளை அளித்தனர். நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு பெரும்பகுதியான பஞ்சமி நிலங்கள் தலித் மக்களிடமிருந்து மற்றவர்களால் சட்ட விரோதமாக அபகரிக்கப்பட்டன. அவற்றை மீட்பதற்காக அவர்கள் நீதிமன்றங்களிலும், மக்கள் மன்றங்களிலும் போராடிக்கொண்டிருக்கின்றனர். அந்தப் போராட்டங்களால் சில தீர்ப்புகளையும் பெற்றுள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் கரகத்தஹல்லி கிராமத்தில் இருந்த 3.39 ஏக்கர் பஞ்சமி நிலத்தை தலித் அல்லாத வேறு சமூகத்தைச் சேர்ந்த கே.பழனியப்பன் என்பவர் ஆக்கிரமித்துக்கொண்டார். அதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் அவரிடமிருந்து நிலத்தைக் கைப்பற்றி மீண்டும் உரியவரிடம் ஒப்படைக்க தருமபுரி கோட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை பிறர் கைப்பற்ற உரிமையில்லை என உறுதியாகத் தெரிவித்தது.

உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசின் வருவாய்த்துறை மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் ஆணை ஒன்றை அனுப்பியது.. (அரசாணை எண் ஜி-1/4868/90 நாள் 15.7.1991) அந்தந்த மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களைக் கண்டறிந்து உரியவர்களிடம் ஒப்படைக்க அதில் அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் 85,744.01 ஏக்கர் பஞ்சமி நிலங்கள் கண்டறியப்பட்டன. அதில் 10,922.54 ஏக்கர் நிலம் பிறரது ஆக்கிரமிப்பில் இருக்கிறது என அரசு தெரிவித்தது. ஆனால், தொடர்ந்து சரியான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை.

1996இல் அதிமுக ஆட்சி முடியப்போகும் நேரத்தில் பஞ்சமி நிலங்களைக் கண்டறிந்து தலித் மக்களிடம் ஒப்படைப்பதற்கென அன்றைய வருவாய்த்துறை அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அது பணியைத் தொடர முடியவில்லை.

அதன் பின்னர், 2011ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் பஞ்சமி நிலங்கள் தொடர்பாகப் பரிந்துரைகளைச் செய்வதற்கென ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எம்.மருதமுத்து தலைமையில் நில நிர்வாக ஆணையர் மற்றும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளான மணிவண்ணன், வே.கருப்பன் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் கேட்டபோது தமிழ்நாட்டில் பஞ்சமி நிலம் சுமார் 12 லட்சம் ஏக்கர் இருப்பதாக நில வருவாய் ஆணையர் தகவல் கொடுத்தார். திமுக ஆட்சி முடிந்து 2011இல் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் நீதிபதி மருதமுத்து கமிஷன் செயலிழந்துவிட்டது.

பஞ்சமி நிலங்களைக் கண்டறிவது அரசாங்கத்துக்கு இயலாத காரியம் அல்ல. அதற்கென்று தனியே ஆவணங்களை இன்றுவரை வருவாய்த்துறை தனியே பராமரித்து வருகிறது. தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்ட பஞ்சமி நில பாதுகாப்பு இயக்கம் 1995ஆம் ஆண்டு மேற்கொண்ட கணக்கெடுப்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 22,398 ஏக்கர்; வடஆர்க்காடு மாவட்டத்தில் 21,316 ஏக்கர், சேலம் மாவட்டத்தில் 13,601 ஏக்கர், விழுப்புரம் மாவட்டத்தில் 11,102 ஏக்கர், தருமபுரி மாவட்டத்தில் 9,004 ஏக்கர், செங்கல்பட்டு மாவட்டத்தில் 950 ஏக்கர், திண்டுக்கல் மாவட்டத்தில் 1,892 ஏக்கர் உள்ளிட்ட 72,142 ஏக்கர் பஞ்சமி நிலங்கள் கண்டறியப்பட்டன. ஒரு சிறு அமைப்பே இவ்வளவு நிலங்களை அடையாளம் காண முடியுமென்றால் அரசாங்கம் நினைத்தால் பஞ்சமி நிலங்கள் அனைத்தையும் அடையாளம் காண்பது கடினமான பணி அல்ல.

தலித் மக்களுக்கு ஒப்படைவு செய்யப்பட்ட பஞ்சமி நிலங்களை வேறு யார் வாங்கியிருந்தாலும், ஆக்கிரமித்திருந்தாலும் அது செல்லாது என்பதை சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்று முக்கியமான தீர்ப்புகள் தெளிவுபடுத்தியுள்ளன.
---------------

1.நீதிபதி கே.சந்துருவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு:

கோயம்புத்தூர் தாலுகாவைச் சேர்ந்த வீரநத்தம் கிராமத்தில் விஜிபி பிரேம் நகர், விவேகானந்தா நகர், குமரன் நகர் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் வீடு கட்டுவதற்காக மனை வாங்கிப் பதிவு செய்துள்ளனர். ஆனால், அது தலித் மக்களுக்கு ரெவின்யூ போர்டின் நிலை ஆணை எண் 15இன் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலமாகும். எனவே, அந்த நிலத்தில் வீடு கட்டக் கூடாது எனத் தடை போடப்பட்டதால், வீடு மனைகளை வாங்கியவர்களால் அதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது (VGP Prem Nagar Minvariya Kudiyirupor Sangam Vs The State Of Tamil Nadu, Dt 07.11.2008, High Court of Madras).

 “தலித் மக்களுக்கு அரசாங்கத்தால் ஒப்படைவு செய்யப்பட்ட பஞ்சமி நிலத்தை அதன் உரிமையாளர் 10 ஆண்டுகளுக்கு விற்கக் கூடாது என்ற நிபந்தனை உள்ளது. ஆனால், அதன்பிறகு அதை விற்பதற்கு எந்தத் தடையும் இல்லை எனவும், உரிய வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தடை ஆணை பெற்ற பிறகே அந்த நிலம் வாங்கப்பட்டு முறையாகப் பதிவு செய்யப்பட்டு மனைகளாகப் பிரித்து விற்கப்பட்டிருக்கிறது” எனவும் வாதிடப்பட்டது.

வாதங்கள் எல்லாவற்றையும் கேட்ட நீதிபதி கே.சந்துரு, தனது தீர்ப்பில் பஞ்சமி நிலம் எதனால் தலித் மக்களுக்குக் கொடுக்கப்பட்டது என்பதையும், அந்த காலத்தில் மிராசுதார்கள் எத்தகைய கொடுமைகளை அந்த மக்களுக்குச் செய்தனர் என்பதையும் விரிவாக எடுத்துக் காட்டியிருக்கிறார்.

1882ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் நாள் நடைபெற்ற ரெவின்யூ போர்டு கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துகளின் சுருக்கத்தைத் தனது தீர்ப்பில் அவர் அட்டவணைப்படுத்திக் காட்டியிருக்கிறார். அதுமட்டுமின்றி தலித் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரத்யேகமான இடுக்கண்கள் குறித்து Dr. அம்பேத்கர் கூறியிருப்பதை மேற்கோள் காட்டியிருக்கிறார்.

தலித் சமூகத்தைச் சேர்ந்த தொழிலாளிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது “அவர்கள் வறுமையால் பீடிக்கப்பட்டவர்கள், அவர்கள் நிலமற்ற விவசாயக் கூலி வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர்களது பொருளாதார நிலையைப் பற்றி மட்டும் பேசினால் போதாது, அப்படிச் சொல்வது உண்மை என்றாலும்கூட. ஒடுக்கப்பட்டோரின் வறிய நிலை அவர்களுக்கு எதிரான சமூகப் பகைமையினால் வந்தது. அந்தப் பகைமையின் விளைவாக அவர்கள் செய்வதற்குத் தயாராக இருந்தாலும் பல்வேறு வேலைகளும் அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன. தலித் தொழிலாளர்களை பிற சாதித் தொழிலாளர்களிலிருந்து வேறுபடுத்துகிற, அவர்களுக்கிடையே அடிக்கடி சிக்கல் வருவதற்குக் காரணமாக அமைகிற உண்மை இதுதான்” என்ற கூற்றை (Dr.Babasaheb Ambedkar: Writings and Speeches Vol. No.II: Page Nos.552 and 553) அப்படியே எடுத்துத் தீர்ப்பில் தந்திருக்கிறார். ரெவின்யூ போர்டின் நிலை ஆணை 15ஐயும், 1941ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணையையும் (G.O.Ms.2217, Rev. d.1.10.41) விரிவாக எடுத்துக் காட்டியிருக்கிறார். 10 ஆண்டுகளுக்குள் விற்கக் கூடாது, அதன் பிறகு தலித் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு மட்டும்தான் விற்க வேண்டும். அப்படி வேறு எவரேனும் அதை வாங்கியிருந்தால் எந்தவித இழப்பீடும் தராமல் அந்த நிலத்தை அவரிடமிருந்து அரசாங்கம் எடுத்துக்கொள்ளலாம் என்பதே பஞ்சமி நிலங்களுக்கான நிபந்தனை என விரிவாக விளக்கமளித்தர் நீதிபதி கே.சந்துரு.

 
தலித் மக்களின் நிலம் தொடர்பாக இதேபோன்ற வழக்குகள் வந்தபோது உச்ச நீதிமன்றம் வழங்கிய பல்வேறு தீர்ப்புகளையும் (State of U.P. v. Zahoor Ahmad, reported in (1973) 2 SCC 547; Manchegowda -vs- State of Karnataka, reported in (1984) 3 SCC 301; Lingappa Pochanna Appelwar v. State of Maharashtra, (1985) 1 SCC 479 ; Papaiah v. State of Karnataka, vide its decision reported in (1996) 10 SCC 533) எடுத்துக்காட்டி “பஞ்சமி நிலம் என்பது தலித் மக்களுக்கு நிபந்தனைக்குட்பட்ட நிலமாக அரசால் வழங்கப்பட்டது. அந்த நிபந்தனை மீறப்பட்டிருந்தால் அந்த நிலங்களை அரசே மீண்டும் கையகப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படி கையகப்படுத்தப்படும் நிலத்தை தலித் சமூகத்தைச் சேர்ந்த வேறொருவருக்கு மட்டுமே அரசு தர வேண்டும்” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தார்.

2. நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வழங்கிய தீர்ப்பு:

நீதிபதி கே.சந்துரு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன் மற்றும் நீதிபதி பி.பி.எஸ்.ஜனார்தன ராஜா ஆகிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அந்த வழக்கு மேல் முறையீடு செய்யப்பட்டது (Madras High Court Judgement on V.G.P. Prem Nagar Vs The State Of Tamil Nadu Dt 05.04.2010) அந்த வழக்கின் தீர்ப்பை எழுதிய நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மட்டுமின்றி பஞ்சமி நிலங்களை பிற சமூகத்தினர் வாங்கியிருந்தால் அது செல்லாது. அந்த நிலத்தை அரசு கையகப்படுத்திக்கொள்ள வேண்டும் என நீதிபதி கே.சந்துரு அளித்த தீர்ப்பையே அந்த அமர்வும் உறுதிசெய்து தீர்ப்பளித்தது.

3. நீதிபதி டி. ஹரிபரந்தாமனின் தீர்ப்பு:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகாவில் உள்ள கருமாண்டிசெல்லிப் பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த செல்வநாயகம் என்பவரின் வாரிசுகளிடமிருந்து 2.87 ஏக்கர் நிலத்தை ஒருவர் கிரயம் செய்கிறார். அந்த நிலத்தின் பூர்வீக உரிமையாளர் செல்வநாயகம் தலித் சமூகத்தைச் சேர்ந்தவராவார். அவருக்கு 1924ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி அந்த நிலம் நிபந்தனைக்குட்பட்டு அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த நிலம் பஞ்சமி நிலம் என்ற விவரத்தைப் பெருந்துறை வட்டாட்சியர் தெரிவித்ததன் அடிப்படையில் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் நிலத்தை வாங்கியவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டுமெனவும், நிலத்தைத் தன் பெயரில் பதிவதற்கு அனுமதி வழங்க வேண்டுமென்றும் மனுதாரர் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹரிபரந்தாமன், இந்த வழக்கில் ஆஜரான அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் இதே போன்றதொரு வழக்கில் நீதிபதி சந்துரு மற்றும் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஆகியோர் அளித்த தீர்ப்புகளையும், உச்ச நீதிமன்றம் 2012ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பு ஒன்றையும் (State of Rajastan and Others Vs. Aanjaney Organic Herbal Private Limited reported in 2012 (9) SCALE 138.) எடுத்துக் காட்டி வாதாடியது பயனுள்ளதாக இருந்தது எனப் பாராட்டிவிட்டு, மேலும் பல உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை எடுத்துக் காட்டி பஞ்சமி நிலத்தை விலைக்கு வாங்கியது ரத்து செய்யப்படுவதாகத் தீர்ப்பளித்துள்ளார்.
---------------

பஞ்சமி நிலங்களை மீட்பதற்குத் தேவையானது என்ன?

நில உரிமைக்கான தலித் மக்களின் நீண்ட நெடிய போராட்ட வரலாற்றில் பஞ்சமி நிலங்களை மீட்பதற்கான போராட்டம் முக்கியமான இடத்தை வகிக்கிறது. அதன் உச்சகட்டமாக 1994ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதியன்று செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள காரணை என்னுமிடத்தில் நடைபெற்ற பஞ்சமி நில மீட்புப் போராட்டத்தில் ஜான் தாமஸ், ஏழுமலை ஆகியோர் போலீஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

பஞ்சமி நிலத்தை தலித் அல்லாத எவர் வாங்கினாலும் செல்லாது என 2008, 2010 மற்றும் 2012 ஆகிய மூன்று ஆண்டுகளில் சென்னை உயர் நீதிமன்றம் சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளது. அது மட்டுமின்றி பஞ்சமி நிலங்களைக் கண்டறிந்து மீட்பது தொடர்பில் தமிழக அரசு 1991ஆம் ஆண்டே தெளிவாக அரசாணை ஒன்றையும் பிறப்பித்திருக்கிறது. எனவே, பஞ்சமி நிலங்களை மீட்பதற்குத் தனியே ஒரு அரசாணையோ, நீதிமன்றத் தீர்ப்போ இனி தேவையில்லை. 

ஆக பஞ்சமி நிலங்களை தலித் மக்கள் அல்லாத வேறு எவரும் கிரையம் வாங்க முடியாது. அப்படி வாங்குவதற்கு வருவாய்த்துறை தடையில்லா சான்றிதழும் வழங்க முடியாது. இவை மீறப்பட்டால் அது சட்ட விரோதமானதாகும்.⚖👨‍🎓

How to probate will?

*உயிலை எப்படி நிரூபிக்க வேண்டும்* 

*ஒரு உயிலின் அடிப்படையில் ஒரு வழக்கைத் தீர்மானிக்கும் பொழுது, அந்த உயில் உள்ளது என்பதை விடவும், அந்த உயில் முறையாக எழுதப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். இது குறித்து உச்ச நீதிமன்றம் " S. R. சீனிவாசா Vs பத்ம வாத்தம்மா (2010-5-SCC-274)" என்ற வழக்கில் தெளிவாக கூறியுள்ளது.*


*இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 68 ஆனது ஒரு உயிலை எப்படி நிரூபிக்க வேண்டும் என்று கூறுகிறது. ஒரு உயிலில் சாட்சி கையெழுத்து போட்டுள்ளவர்கள் உயிரோடு இருந்தால் அல்லது நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தால் அவர்களில் ஒருவரையாவது சாட்சியாக விசாரித்துக் அந்த உயில் எழுதப்பட்டதை நிரூபிக்க வேண்டும். ஒருவர்கூட உயிரோடு இல்லை என்றால் இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 69 ல் கூறப்பட்டுள்ளவாறு சாட்சிக் கையொப்பம் போட்டுள்ளவர்களில் ஒருவருடைய கையெழுத்தை தெரிந்துள்ள நபரை சாட்சியாக விசாரிக்க வேண்டும். அவ்வாறு கையெழுத்தை மட்டும் அடையாளம் காட்டுபவர் அந்த உயில் எழுதப்பட்டதை குறித்து சாட்சியம் அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.*


*சென்னை உயர்நீதிமன்றம் " ஜானகிதேவி Vs R. வசந்தி மற்றும் பலர் (2005-1-LW-455)" என்ற வழக்கில், இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 68 யைப் படித்து பார்த்தால், உயிலில் சாட்சிக் கையொப்பமிடுவதும், உயிலை எழுதுவதும் வெவ்வேறான சங்கதிகளாகும். ஒன்று மற்றொன்றை தொடர்ந்து வருகிறது என்றும், ஒரு உயில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்கிற காரணத்தால், அந்த உயில் எழுதப்பட்டதை நிரூபித்து விட்டதாக கருத முடியாது, ஒரு வழக்கில் உயிலை நிரூபிக்க எந்தவிதமான சாட்சியங்களும் இல்லாத நிலையில் தான் உயில் பதிவு செய்யப்பட்டதற்காக இந்திய பதிவுச் சட பிரிவு 60 ன்படி சார் பதிவாளரால் வழங்கப்படுகின்ற சான்றிதழை, உயில் எழுதப்பட்டுள்ளது என்பதை நிரூபிப்பதற்கான முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.*


*அதேபோல் சென்னை உயர்நீதிமன்றம் "கற்பகம் Vs E. புருஷோத்தமன் மற்றும் இருவர் (2010-3-LW-282)" என்ற வழக்கில், ஒரு உயில் எழுதப்பட்டது குறித்து மிகத் கடுமையாக மறுத்துரைக்கப்படாத நிலையில்,  உயிலில் சாட்சிக் கையொப்பமிட்டுள்ளவர்களை நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தீர்ப்பு கூறியுள்ளது.*


*எனவே ஒரு உயிலை நிரூபிப்பதற்கு அதில் சாட்சிக் கையொப்பமிட்டுள்ளவர்களில் ஒருவரை சாட்சியாக விசாரிக்க வேண்டும். யாரும் உயிருடன் இல்லாத பட்சத்தில் சாட்சிக் கையொப்பமிட்டுள்ளவர்களின், கையெழுத்தை அடையாளம் காட்டக்கூடிய ஒருவரை சாட்சியாக விசாரித்து உயிலை நிரூபிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.*

Registration act l பதிவு சட்டம்

*பதிவுச் சட்டம் - முக்கிய பிரிவுகள்*

1. பதிவுச் சட்டம் பிரிவு 34A ன்படி 14.04.2001 முதல் கிரைய ஆவணங்களில் எழுதி வாங்குபவரும் கையொப்பமிட வேண்டும்.

2. அரசாணை எண். G. O MS. 57 CT&RE Dated - 26.06.2006 ன்படி பதிவுச் சட்டம் பிரிவு 32A ஆனது 01.07.2006 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி ஆவணத்தை தாக்கல் செய்பவர் புகைப்படமும், கிரைய ஆவணமெனில் எழுதி கொடுப்பவர் /எழுதி வாங்குபவர் புகைப்படமும், கைரேகையும் பெற வேண்டும்.

3. பதிவுச் சட்டம் பிரிவு 34B ன்படி 1.12.2012 முதல் முகவர், பொது அதிகார ஆவணத்தில் கையொப்பமிட வேண்டும்.

4. ஒரு ஆவணம் பதிவுச் சட்டம் பிரிவு 47 ன்படி எழுதிக் கொடுக்கப்பட்ட தேதியிலிருந்தே செயல்பட தொடங்கும்.

5. தமிழ்நாடு சொத்துக்களை வேறு மாநில பதிவு அலுவலகத்தில் பதிவு செய்வது பதிவுச் சட்டம் பிரிவு 28(b) ன் படி செல்லாது.

 

Copyright @ 2017 created by ABINAYA SELLAMUTHU