*பதிவுச் சட்டம் - முக்கிய பிரிவுகள்*
1. பதிவுச் சட்டம் பிரிவு 34A ன்படி 14.04.2001 முதல் கிரைய ஆவணங்களில் எழுதி வாங்குபவரும் கையொப்பமிட வேண்டும்.
2. அரசாணை எண். G. O MS. 57 CT&RE Dated - 26.06.2006 ன்படி பதிவுச் சட்டம் பிரிவு 32A ஆனது 01.07.2006 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி ஆவணத்தை தாக்கல் செய்பவர் புகைப்படமும், கிரைய ஆவணமெனில் எழுதி கொடுப்பவர் /எழுதி வாங்குபவர் புகைப்படமும், கைரேகையும் பெற வேண்டும்.
3. பதிவுச் சட்டம் பிரிவு 34B ன்படி 1.12.2012 முதல் முகவர், பொது அதிகார ஆவணத்தில் கையொப்பமிட வேண்டும்.
4. ஒரு ஆவணம் பதிவுச் சட்டம் பிரிவு 47 ன்படி எழுதிக் கொடுக்கப்பட்ட தேதியிலிருந்தே செயல்பட தொடங்கும்.
5. தமிழ்நாடு சொத்துக்களை வேறு மாநில பதிவு அலுவலகத்தில் பதிவு செய்வது பதிவுச் சட்டம் பிரிவு 28(b) ன் படி செல்லாது.