-->
Breaking News
Loading...

ஆவண நகல்களை பெறுவது எப்படி

*இந்திய சாட்சியச் சட்டம் மூலம்  பெற*


*தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தான் ஆவண நகல்களைப் பெற முடியும் என்பது இல்லை. அந்தச் சட்டம் வருவதற்கு முன்பே இந்திய சாட்சியச் சட்டம் (INDIAN EVIDENCE ACT) நமக்கு அந்த உரிமையை வழங்கியுள்ளது. இதன் மூலம் ஆவண நகல்களை நாம் எப்படிப் பெறலாம் என்பதைப் பற்றி கீழே காணலாம்.*

*இந்திய சாட்சியச் சட்டம் - 1872*

*இந்திய சாட்சியச்சட்டம், பிரிவு 74ல் பொது ஆவணங்களை பற்றி தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது*. 

*இந்திய சாட்சியச்சட்டம், பிரிவு 75ல்  தனியார்* *ஆவணங்களை பற்றி* *தெளிவாக குறிப்பிடப்* *பட்டுள்ளது.*

*இந்திய சாட்சியச்சட்டம், பிரிவு 76 ஒரு பொது ஊழியரின் வசம் உள்ள பொது ஆவணங்களை ஆய்வு செய்யவும், அவற்றை சான்று ஒப்பம் இட்ட ஆவண நகலாக* *பெறவும் நமக்கு உரிமையை வழங்கியுள்ளது.  அதற்கென்று சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ள கட்டணத்தை நாம்* *அவர்களிடம் செலுத்த வேண்டும். சான்றொப்பம் இட்டு ஆவண நகல்களை அளிக்க முடியாவிட்டால், அந்த ஆவண நகல்களின் கீழே உண்மை நகல் என்று கையொப்பம் இட்டு பொது ஊழியர் அதனை நமக்கு வழங்க வேண்டும்.*

*ஆவண நகல்களைப் பெற* *என்ன செய்ய* *வேண்டும்?*

*சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கு நீங்கள் எழுதுகின்ற விண்ணப்பத்தின்* *வலதுபுறத்தில் ஐந்து ரூபாய் கோர்ட் ஃபீ ஸ்டாம்ப் ஒட்டவேண்டும். தலைப்பில் இந்திய சாட்சியச்சட்டம், பிரிவு 76ன் கீழ் ஆவண நகல்கள் வேண்டி விண்ணப்பம் என்று* *குறிப்பிட வேண்டும்.   அந்தக் கடிதத்தில் உங்களுக்குத் தேவையான ஆவண நகல்களைப் பற்றி குறிப்பிட வேண்டும்.* *கடிதத்தை* *பதிவுத்தபாலில் ஒப்புதல்* *அட்டை* *இணைத்து அனுப்ப* *வேண்டும்.*

*கடிதம் அனுப்பி 30 நாட்கள் ஆனபிறகும் எந்தவித பதிலும் அவர்கள் உங்களுக்கு தரவில்லை என்றால், ஒரு நினைவூட்டல் கடிதம் ஒன்றை அவர்களுக்கு அனுப்பவேண்டும். அந்த நினைவூட்டல் கடிதம் அனுப்பி 15நாட்கள் ஆனபிறகும் உங்களுக்கு அவர்கள் தரப்பில் இருந்து பதில்  தரவில்லை என்றால், சட்டப்படியான அறிவிப்பு ஒன்றை அவர்களுக்கு அனுப்ப வேண்டும்*.  

*அறிவிப்பு அனுப்பி 15 நாட்கள் ஆன நிலையில்   குற்ற விசாரணை முறைச் சட்டம் - 1973, பிரிவு : 2(4)ன் கீழ்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். அல்லது குற்ற விசாரணை முறைச் சட்டம் - 1973, பிரிவு :200ன் கீழ்  நீதிமன்றத்தில் தனி நபர் புகார் மூலம் வ்ழக்கு தொடுத்து  ஆவண நகல்களைப் பெறலாம்*

ABINAYA

The purpose of the site is to help you take maximum advantage of the government issued orders, epapers and latest news so that you spend more time doing things your really love.

 

Copyright @ 2017 created by ABINAYA SELLAMUTHU