-->
Breaking News
Loading...

பிற்கால சோழர்கள்

சதாசிவ பண்டாரத்தார்
எழுதிய ’பிற்கால சோழர்கள்’ என்ற ஆய்வு நூல் 400 பக்கங்கள் வரும்.
அதை 25 பாயிண்டுகளாக சுருக்கினால் இப்படி வரும்...
1.பிற்கால சோழர்களின் கதை விஜாலயச்சோழனிடமிருந்து தொடங்குகிறது. கிபி 846 ஆம் ஆண்டு முத்தரையர்களை நிருபதுங்க வர்மன் என்ற பல்லவ மன்னனின் துணையோடு முறியடித்து சோழ தேசத்தை மீட்கிறான். இவருடைய உடலில் 96 விழுப்புண்கள் இருந்ததாம்.

முக்கிய குறிப்பு :
சிவகாமியின் சபதத்தில் வரும் நரசிம்ம பல்லவர் - புலிக்கேசி சாளுக்கியர் யுத்தம் கி.பி 642 ஆம் ஆண்டு நடந்தது. அது நடந்து 200 ஆண்டுகள் கழித்து சரியாக பிற்கால சோழர்கள் சரித்திரம் தொடங்குகிறது.
இந்த கிபி 642 ஆம் ஆண்டுக்கு இன்னொரு விசேஷம் உண்டு. ஆம் தமிழர்களுக்கு விநாயகர் என்ற கடவுளை சிறுத்தொண்டர் அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த காலத்தில் ஒரு மன்னனை வென்றால் அங்கிருக்கும் அடையாளங்களை அவர்கள் நாட்டுக்கு எடுத்து வருவார்களாம். அப்படி சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதி சைவர் வாதாபியில் இருந்து எடுத்து வந்த கடவுளே விநாயகர் ஆவார்.
கபிலர் காலத்திலேயே விநாயகரை எழுதி இருக்கிறார் என்று சிலர் திரித்து சொல்வதையும் சதாசிவ பண்டாரத்தார் மறுக்கிறார்.
திருவிரட்டை மாலை என்னும் நூலில் விநாயகர் குறிப்பு வருகிறது. அதை எழுதியவர் கிபி ஒன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த கபிலர் அன்று. அதை எழுதியவர் பிற்காலத்தில் வந்த கபிலதேவநாயனார் என்ற புலவர் என்று சதாசிவ பண்டாரத்தார் ஆய்வுகள் புத்தகம் ஏழாம் தொகுதியில் தெளிவாக சொல்லி இருக்கிறார்.
அப்படி பார்க்கும் போது தமிழர்களுக்கு விநாயகர் என்ற கடவுள் (   2019 - 642 = 1377 ) 1377 வருடங்கள் தெரிந்தவராய் இருக்கிறார்.
ஆயிரத்து முன்னூற்று எழுபத்தி ஏழு வருடங்கள் என்பது தமிழர் நாகரிகம் தோன்றி குறைந்தது 1500 வருடங்கள் கழித்து வந்தாலும் அது பழமையான காலம்தான்.
இனிமேல் விநாயகர் பற்றி யாராவது பேசினால் “முழுமுதற் கடவுளான பிள்ளையாரை தமிழர்களாகிய எங்களுக்கு ஆயிரத்து முன்னூறு வருடங்களாக பழக்கம் என்று பெருமையாக சொல்லுங்கள்.
அந்த கால வாதாபி என்பது இப்போதைய மகாராஷ்டிர மாநில எல்லையில் இருக்கும் கர்நாடக மாநில மாவட்டமான பிஜப்பூரில் இருக்கிறது.
சோழர்கள் கதை என்று சொல்லி பிள்ளையார் பக்கம் போய்விட்டோம் மறுபடியும் சோழர்களுக்கே வருவோம்.
2.விஜயாலயச்சோழனின் மகன் ’முதல் ஆதித்த சோழன்’ தன் தந்தைக்கு உதவிய பல்லவ மன்னனின் புதல்வன் ‘அபராஜித வர்மனை’ போரில் வென்று சோழதேசத்தை விஸ்திரிக்கிறார்.
3.பொதுவாக சோழர்கள் சைவ மதத்தை ஆராதிப்பவர்களாக இருக்கிறார்கள்.அதற்காக மற்ற மதங்களை எதிர்ப்பதும் இல்லை.ஒன்றிரண்டு இடங்களில் மட்டுமே மதவெறியைக் காண்கிறோம்.
4.முதல் ஆதித்த சோழனின் மகன் பராந்தகச்சோழனே சிதம்பரம் கோவிலுக்கு பொற்கூரை வேய்ந்த மன்னன் (விஜாயலயச்சோழன் பேரன்)
5.சோழ வம்சத்தில் இராசகேசரி,பரகேசரி என்ற பட்டம் கொண்டு ஆள்வது பழக்கமாய் இருந்து வந்தது. அதாவது ஒரு மன்னன் இராசகேசரி என்று பட்டம் கொண்டு ஆண்டால்,அதற்கு அடுத்து வரும் மன்னன் பரகேசரி என்ற பட்டத்தோடு ஆள்வான்.அதற்கடுத்து வருபவர் இராசகேசரி. இப்படி மாற்றி மாற்றி வைத்துக் கொள்வார்கள்.எந்த இடத்திலும் இந்தப் பாலிஸியை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
6.பொன்னியின் செல்வன் நாவலில் மூலமாக புகழ்பெற்ற ”ஆதித்தச் சோழன் கொலையில்” கொலையாளி,ரவிதாசரும் அவரது கூட்டாளிகள்தான் என்று சதாசிவ பண்டாரத்தார் கூறுகிறார்.சுந்தரச்சோழன் இறந்து உத்தமச்சோழன் ஆட்சி செய்து போக பதினாறு ஆண்டுகள் ஆகி இராச இராச சோழன் வந்த பிறகுதான் கொலையாளிகள் உடந்தை என்று தண்டனை கொடுத்ததாக கல்வெட்டு கிடைத்திருக்கிறது.சதாசிவ பண்டாரத்தார் உத்தமச்சோழன் தண்டனை கொடுத்ததாக கல்வெட்டு கிடைக்கவில்லை.கல்வெட்டு கிடைக்காதற்காக ஒருவனை சந்தேகப்பட முடியாது.அதனால் ரவிதாசனே கொலையாளியாக இருக்ககூடும் என்கிறார்.
7.இராச இராச சோழனின் மகன் இராசேந்திரச் சோழன் கடல்கொண்டு சுமத்திரா தீவுகள் வரை பிடிக்கிறான்.பாண்டியனை வென்று அவன் மகனை பாண்டிய தேசத்திற்கு ராஜாவாக்குகிறான்.’ சோழ பாண்டியன்’
என்ற வம்சத்தை உருவாக்க முயல்கிறான்.தன் மகனுக்கு ‘சடையவர்மன் சுந்தர சோழ பாண்டியன்” என்று முடிசூட்டுகிறான்
( கவனிக்க சோழபாண்டியன் ).
8.இராச இராசன்/இராசாதிராச இந்த இரண்டும் வெவ்வேறு பெயர்கள்.இந்த இடத்தில் சோழ சரித்திரம் படிப்பவர்கள் கவனமாய் இருக்க வேண்டும்.
10.இராசேந்திர சோழனுக்கு ஒரு சிறப்பு உண்டு.அவருடைய மூன்று புதல்வர்களும் அரியணையை ஆண்டிருக்கிறார்கள்.முதல் புதல்வன் ‘முதல் இராசாதிராச சோழன்’ ஆண்டு போரில் மறைய, அடுத்த புதல்வன் ‘இரண்டாம் இராசேந்திர சோழன் ஆண்டான், அவனும் இறந்து போக, அடுத்தவன் வீரராசேந்திர சோழனும் ஆள்கிறான்.( ஏற்கனவே ‘சோழபாண்டியன்’ பார்த்தோம்,அவரும் இராசேந்திர சோழன் புதல்வர்தான்)
11.வீரராசேந்திர சோழனின் (விட்ராதீங்க இவர் இராசேந்திர சோழனில் கடைசி மகன் )மகன அதிராசேந்திர சோழன் சில மாதங்களே ஆட்சி செய்கிறான்.நோயுற்று இறந்து விடுகிறான்.
இந்த இடத்தில் பிந்தையைய சோழர்களின் முதல் செட் முடிகிறது.கவனிக்க இதில் எல்லா மன்னர்களையும் நான் சொல்லவில்லை.இது துணுக்கு பத்திதான்.அடுத்து பிற்கால சோழர்களின் இரண்டாம் செட்
12.இப்படியாக வீரராசேந்திர சோழனின் இறப்புக்கு பின்னால், சோழ வம்சத்திற்கு வாரிசு இல்லை.என்ன செய்வதென்று சோழ மந்திரிகள் திகைக்க அதற்கொரு தீர்வாக இராசேந்திரச் சோழனின் மகள் வயிற்றுப் பேரனான குலோத்துங்கச் சோழன் ஆட்சி பொறுப்பை ஏற்கிறான்.இது சோழ சரித்திரத்தில் முக்கியமான நிகழ்வாகும்.
13.குலோத்துங்க சோழன் உண்மையில் கீழைசாளுக்கிய மன்னன் இராசராச நரேந்திரனுக்கும் இராசேந்திரச் சோழரின் புதல்வி அமங்கை தேவியாருக்கும் பிறந்தவன்.வேங்கி நாட்டு இளவரசனாக ‘விஷ்ணுவர்த்தன்’ என்று பெயரில் பட்டம் சூட்டிக்கொண்டவன். பாதி தமிழ் பாதி தெலுகு கலந்த மன்னன்.
14.வேங்கிநாடு என்பது விஜயவாடாவை தலைநகராக கொண்ட நாடு.குலோத்துங்கச் சோழன் வேங்கி நாட்டை ஆள்வதை அவன் சித்தப்பா விசயாதித்தன் விரும்பவில்லை.இதனால் சித்தப்பாவிடம் பகை வளர்கிறது.பின் குலோத்துங்கச் சோழன் போட்டியில் விலகி விடுகிறார்.
15.அந்த நேரத்தில் சோழ சிம்மாசனம் காலியாகி ஆளில்லாமல் இருக்கவே “சாளுக்கிய சோழனான” குலோத்துங்கன் உருவாகிறான்.
16.மேலை சாளுக்கிய நாடுகள் மீது போர்தொடுத்து கைப்பற்ற முயற்சிப்பது வீண் வேலை.அதனால படைவீரர்களும் பொருளாதாரமும்தான் நாசமாய் போகிறது என்று அது மாதிரிப்போரை அறவே வெறுத்தார்.இது மிக முக்கியமான முடிவாகும்.
17.குலோத்துங்கச் சோழன் மாபெரும் வீரன். ஏற்கனவே பல போர்களை இராசேந்திரச் சோழனோடு சேர்ந்து செய்தவன்.சோழநாட்டை மிகந்நேர்த்தியாக ஆட்சி செய்தவன்.
18.குலோத்துங்க சோழன் காலத்தில் சுங்க வரி கிடையாது. இதனால் ‘சுங்கம் தவிர்த்த சோழன்’ என்று அறியப் பெற்றான்.சுங்கத்தில் கிடைககாத பணத்தை விளைநிலங்களையெல்லாம் அளந்து ஒழுங்கு படித்தி வரி வசூலிப்பதில் ஈடு செய்தான்.முதல் முதலில் நிலவரியை ஒழுங்கு படுத்தியது குலோத்துங்கன்.அதற்காக அவன் எடுத்துக் கொண்ட காலங்கள் இரண்டு வருடங்கள்.
19.குலோத்துங்கன் ஐம்பது வருடம் ஆட்சி செய்கிறான். சோழ ஆட்சி காலத்தில் இது நீண்ட ஆண்டுகளாகும்.
20.இதற்கிடையில் குலோத்துங்கனின் தம்பி (சித்தப்பா பையன் )இறந்து விட அவன் அப்பா குலோத்துங்கனை விரட்டிய விசியாதித்தன், மகனுடைய இழப்பு தாளாமல் அவரும் இறந்துவிட, குலோத்துங்கன் தன் ஒவ்வொரு மகனாக இரண்டிலிருந்து ஐந்து வருடங்கள் வரை வேங்கி நாட்டை ஆண்டு திரும்ப செய்கிறார். நான்கோ ஐந்தோ மகன்கள் இப்படி வேங்கி நாட்டை ஆள்கிறார்கள்.
21.இரண்டு கலிங்கப்போர்களை பார்த்தவன் குலோத்துங்கன்,.இதில் முதல் கலிங்கபோரை செய்தது குலோத்துங்க சோழனின் மூத்த மகன் விக்கிரம சோழன்தான்.இருப்பினும் அப்போது விக்கிரம சோழன் ஆட்சி செய்யவில்லை என்பதால் அந்த வெற்றியின் புகழ் குலோத்துங்கனுக்கே வந்துவிடுகிறது.
குலோத்துங்க சோழனின் முதல் மகன் விக்கிரமச் சோழன் ஆட்சிக்குவருகிறான்.கவிஞர் ஒட்டக்கூத்தர் இவன் காலத்தில் இருந்துதான் தன் அரச புலவராக பதவியேற்று சிறப்பிக்கிறார்.மிகப்பெரிய பஞ்சம் வருகிறது இவர் ஆட்சிகாலத்தில்.
22.விக்கிரமனின் மகன் இரண்டாம் குலோத்துங்கன். இவர்தான் தசாவதாரம் நெப்போலியன்.தில்லை கோவிலை எழுப்ப இடைஞலாய் இருந்த திருமால் சிலையை கடலில் போட்டதுதவிர யாரையும் மதமாற்ற சித்திரவதையெல்லாம் செய்ய வில்லை.இவனை மதச சகிப்புள்ள நல்லவர்தான் என்றும் சதாசிவ பண்டாரத்தார் கூறுகிறார்.
23.நன்னூலை(இலக்கண நூல்) எழுதிய பவணநிதி முனிவர்,மூன்றாம் குலோத்துஙக்ன் காலத்தில் அவையில் இருந்தவரே.
24.பாண்டியன் மாறவர்மன் சுந்தர பாண்டியன் வீரம் கொண்டு மூன்றாம் ராசராசனை (கிபி 1216-1258) தோற்கடிக்கிறான்.சோழர்களின் வீழ்ச்சி ஆரம்பமாகிறது
25.பிற்கால சோழ அதிகாரத்தின் கடைசி முகமாக மூன்றாம் ராசேந்திரன் இருக்கிறான்.இவன் பாண்டியன் சடைய வர்மனால் 1251 இல் தோற்கடிக்க படுகிறான்.பல உள்காயங்களுக்கு பிறகு 1279 இறந்து விடுகிறான்.
இங்கே பிந்தைய சோழர்களின் சரித்திரம் முடிகிறது.

ABINAYA

The purpose of the site is to help you take maximum advantage of the government issued orders, epapers and latest news so that you spend more time doing things your really love.

 

Copyright @ 2017 created by ABINAYA SELLAMUTHU