விதுரர் சொன்ன நீதி சாஸ்திரம். இந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது. 1. பசி வயிற்றை கிள்ளும் போது. 2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது. 3. போதையில் இருக்கும் போது. இந்த மூன்று சமயங்களில் யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது. 1. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது. 2. மிகவும் துக்கத்தில் இருக்கும் போது. 3. மிகவும் கோபத்தில் இருக்கும் போது. இந்த மூன்று விதமானவர்களின் நட்பை ஒதுக்க வேண்டும். 1. நம்மைப் பற்றி உணராதவர்கள். 2. நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள். 3. நமக்கு ஈடாக செயல்பட முடியாதவர்கள். இந்த மூன்று பேரை எப்போதும் மறக்கக் கூடாது. 1. ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள். 2. நம் குறைகளை பெரிது படுத்தாதவர்கள். 3. நம்முடைய நலத்தை நாடுபவர்கள். விரோதியை நம்பலாம். ஆனால் துரோகியை ஒரு போதும் நம்பவும் கூடாது. மன்னிக்கவும் கூடாது. ஒருவருடைய குணம் சரியில்லை என்று அறிந்த பின் அவர்களை விட்டு ஒதுங்கி போவதே நல்லது.இல்லையேல் அவர்கள் தரத்திற்கு நம்மை தாழ்த்தி விடுவார்கள்....
Breaking News
Loading...
June 23, 2017
விதுரர் சொன்ன நீதி சாஸ்திரம்.
ABINAYA
Interesting facts
AUTHOR
ABINAYA
The purpose of the site is to help you take maximum advantage of the government issued orders, epapers and latest news so that you spend more time doing things your really love.
Related Posts